காரைக்குடி சிக்கன் கறி சமைக்க தேவையானவை
{6}காய்ந்த மிளகாய்
வெங்காயம் ஒன்று (பெரியது)
சிக்கன் அரை கிலோ
{2} கொத்து கறிவேப்பிலை
{2}தக்காளி
சோம்பு கால் தேக்கரண்டி
(தாளிக்க) உப்பு, எண்ணெய் தேவைக்கேற்ப
{2} பச்சை மிளகாய் (அ) மிளகு {2} தேக்கரண்டி
{2} தேக்கரண்டி சாம்பார் பொடி / மிளகாய் தனியா தூள் கலவை
மஞ்சள் தூள் சிறிது அரைக்க:
{2} தேக்கரண்டி (விரும்பினால்) இஞ்சி, பூண்டு விழுது
சீரகம் ஒரு தேக்கரண்டி
மிளகு ஒரு தேக்கரண்டி
மராத்தி மொக்கு சிறிது
பட்டைஒரு துண்டு
{4}ஏலக்காய்
{5} கிராம்பு
கால் பாகம் ஜாதிக்காய்
{8} கொத்துகறிவேப்பிலை
{4} மேசைக்கரண்டி தேங்காய் துருவல்
உணவு செய்முறை : காரைக்குடி சிக்கன் கறி
சிக்கன் துண்டுகளை சுத்தம் செய்து மஞ்சள் தூள், சிறிது உப்பு மற்றும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பிரட்டி வைக்கவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் அரைக்க கொடுத்துள்ளவற்றில் தேங்காய் துருவல், கறிவேப்பிலை தவிர மற்ற அனைத்தையும் சேர்த்து லேசாக சிவக்க வறுக்கவும்.
அதன் பிறகு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.கடைசியாக தேங்காய் துருவல் சேர்த்து லேசாக வதக்கி எடுத்து ஆறவிடவும். ஆறியதும் முதலில் பொடியாக அரைத்து பின்பு தேவைக்கேற்ப நீர் விட்டு நைசாக அரைத்துக் எடுத்துக் கொள்ளவும். .
கடாயில் எண்ணெய் விட்டு சோம்பு தாளித்து, சிறிது கறிவேப்பிலை மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும். (பச்சை மிளகாய் சேர்க்க விரும்பினால் சேர்க்கலாம்). அதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.தக்காளி குழைய வதங்கியதும் சாம்பார் பொடி அல்லது மிளகாய் மற்றும் தனியா தூள் சேர்த்து பிரட்டி எண்ணெய் பிரிய வதக்கவும். .
தூள் வாசம் போனதும் ஊற வைத்த சிக்கன் துண்டுகளைச் சேர்த்து பிரட்டி மூடி வேகவிடவும். (நீர் சேர்க்கத் தேவையில்லை. சிக்கனிலிருந்து வரும் நீர் மசாலாவோடு கலந்து மீண்டும் சிக்கன் அதை முழுவதுமாக இழுத்துவிடும். இவ்வாறு செய்வதால் சிக்கனுடன் மசாலா சேர்ந்து நன்றாக ஊறி இருக்கும்). சிக்கன் நன்றாக வெந்ததும் அரைத்த மசாலா கலவையை ஊற்றி கலந்து கொதிக்கவிடவும். .
பச்சை வாசம் போகக் கொதித்து எண்ணெய் பிரியும் போது சிறிது கறிவேப்பிலை மற்றும் மிளகு தூள் (விரும்பினால்) சேர்த்து கலந்து 2 நிமிடங்கள் கழித்து இறக்கவும். சுவையான காரைக்குடி சிக்கன் கறி தயார். .
No comments:
Post a Comment