Tuesday, 14 August 2018

புல்ஸ் ஐ ஆப்பம் -Bulls Eye Appam


தேவையானவை : 

ஆப்பத்துக்கு : 

1. பச்சரிசி அரிசி – 1/2 டம்ளர்

2. புழுங்கல் அரிசி – 1/2 டம்ளர்

3. அவல் – ஒரு மேசை கரண்டி

4. ஜவ்வரிசி – ஒரு தேக்கரண்டி

5. உளுந்து – ஒரு மேசைகரண்டி

6. உப்பு – 3/4 தேக்கரண்டி

7. ஆப்ப சோடா – 1/4 தேக்கரண்டி

8. தேங்காய் – நான்கு பத்தை துருவியது

9. வெந்தயம் – 1/2 தேக்கரண்டி

புல்ஸ் ஐக்கு :

1. முட்டை – 3

2. மிளகு தூள் - தேவைக்கு ஏற்ப

3. உப்பு - தேவைக்கு ஏற்ப

செய்முறை:

1. முதலில் ஒரு பாத்திரத்தில் புழுங்கல் அரிசி, பச்சரிசி ஆகியவற்றுடன், அவல் ,உளுந்து, ஜவ்வரிசி, வெந்தயத்தை சேர்த்து முன்று மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு துருவிய தேங்காய் அனைத்தையும் சேர்த்து அரைத்து உப்பு சோடாமாவு போட்டு எட்டு மணி நேரம் புளிக்க விடவும்.

2. ஆப்ப சட்டியை காயவைத்து வெங்காயத்தை பாதியாக அரிந்து ஃபோர்க்கில் குத்தி எண்ணை சிறிது விட்டு சுற்றிலும் தேய்க்கவும். அப்பதான் ஆப்பம் ஒட்டாமல் பிஞ்சி போகாமல் வரும். ஒரு குழிகரண்டி ஆப்பமாவை உற்றி சுழற்றி விடவும்.

3. ஒரு முட்டையை கலக்காமல் அப்படியே ஊற்றி மேலும் சிறியதாக சுழற்றிவிட்டால் வெள்ளை கருமட்டும் எல்லா மாவிலும் படும். பிறகு மூடி போட்டு 5 நிமிடம் மிதமான தீயில் வேகவிடவும் நல்ல முக்கால் பாகம் வெந்து வரும் போது மிளகு உப்பு தூவி இறக்கினால் சுவையான, சத்தான புல்ஸ் ஐ ஆப்பம் ரெடி....

No comments:

Post a Comment